Saturday 22 November 2014

இராஜேந்திர சோழன்

அண்மையில் எழுத்து யோகி திரு பாலகுமாரன் அவர்களின் இராஜேந்திர சோழன் (கங்கை கொண்ட சோழன் என்று அழைக்கப் பட்டவர்) நான்கு பாகங்களும் படிக்கும் பேறு கிடைத்தது.  இது சரித்திர நாவல் தான். இதில் ஒரு சுவயூட்டலுக்காக ஆசிரியரின் கற்பனைகளும் சேர்த்து நாவலாக எழுதப் பட்டிருக்கிறது என்றாலும், பண்டை நாகரிகமும் கலாச்சாரமும் அறிந்துகொள்ள விரும்புவோர் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்றாகும்.
கல்கியின் பொன்னியின் செல்வன் இவை அனைத்திற்கும் முன்னோடி என்பது மறுக்க முடியாது. ஆனாலும் பாலகுமாரனின் வார்த்தை பிரயோகங்களும் எழுத்து நடையும் இந்த நாவலுக்கு ஒரு புது வடிவத்தை கொடுத்துள்ளது என்பது மிகை அல்ல.
ஒவ்வொரு பாகமும் 500 பக்கங்களுக்கு மேல். மொத்தம் 4 பாகங்கள்.  ஒவ்வொரு தமிழனும் அதுவும் தஞ்சை மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் படித்து அறியவேண்டிய ஒரு நூலாகும்.