Tuesday 7 August 2018

நல்லவர் யார்?

நல்லவர் யார்?

தமிழகம் சேணம் இல்லா தறிகெட்ட குதிரை நிலையில் உள்ளது. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் ஆக முயற்சி. என்னவோ 50 ஆண்டு காலமாக தமிழகம் செழித்து வளர்ந்தது போலவும் இப்போது நாடு நாசமாகி நாறி போனது போலவும் ஒரு பிரமை ஏற்படுத்தப் பட்டு உள்ளது.

கொஞ்சம் பின்னோக்கி பாப்போம். வரலாறு என்ன சொல்கிறது? ஒரு குடும்பத்தின் பேராசை காரணமாக நாடு கொள்ளை அடிக்கப்பட்டு மக்கள் வளம் சூறையாடப்பட்டது. தலைமையின் சித்தாந்தம் அவர்கள் குடும்பத்தாலேயே பின்பற்றப்படவில்லை. சனாதன தர்மம் நசுக்கப் பட்டு அயல் நாட்டு மார்க்கங்கள் வெண்சாமரம் வீசப்பட்டு வரவேற்கப்  பட்டது. காரணம் கோடி கோடியாக கொட்டி கொடுக்கப் பட்டது.

இறைவன் இல்லை என்று சித்தாந்தம் பேசும் தலைமை மாற்று மார்கங்களின் விழாக்களில் பங்கேற்பது எதற்கு? அப்போ அவர்களின் கடவுள்களை இவர் கடவுளாக ஏற்க வில்லை என்று அர்த்தம். இது தெரியாமல் கோடியில் கொட்டி கொடுத்து ஏமார்ந்து போனது யார்?  இந்துக்களுக்கு துரோகம் செய்து, பிற மார்க்கத்தவருக்கு நம்பிக்கை துரோகம் செய்தது தான் தலைமையின் சாதனை. 

ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார் - "ப்ரீயா கொடுத்தால் பினாயில் கூட சாப்பிடுவார்கள்". பொய்யும் புரட்டும் சொல்லி, போதையில் மக்களை வைத்து, அவர்கள் உழைப்பை உறிந்து  சுயநலமாய் சொத்து சேர்த்தது  தான் தலைவரின் சாதனை.

அரசியல் பொன்விழா கண்ட நாயகர் நாட்டுக்கு செய்தது என்ன? தனது  கட்சி சங்கர மடம் இல்லை என்றார். ஆம் சங்கர மடம்  இல்லை தான். அங்கு உங்கள் கட்சி போல ஒரு குடும்பத்து ஆக்ரமிப்பு இல்லை. பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப் பட்டு, பொதுநலம் ஒன்றே நோக்கமாக கொண்டு செயல் படுபவர்கள் அவர்கள். உங்களை போல் நரகலில் கூட நயா பைசா தேடும் நய வஞ்சகம் இல்லை.

தமிழனுக்கே உண்டான பண்பாடு, அன்பு, ஒழுக்கம், இறை பக்தி, விருந்தோம்பல் இவை எதுவுமே  இல்லாத நீங்கள் உங்களை எப்படி தமிழின தலைவனாக சொல்லிக் கொள்ள இயலும்? உங்களது படைப்புகளை கொண்டு நீங்கள் ஒரு தமிழ் அறிஞர் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாமே தவிர, தமிழ் இனத்திற்கு தலைவராக உங்களை ஏற்கவே முடியாது. ஒரு தலைவன் என்பவன் தனது குடிமக்களிடம் பார பட்சம் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் உங்களுக்கோ, ஜாதி சண்டை, மத சண்டை வளர விட்டு அதில் குளிர் காய்வது என்பது பொழுது போக்கு. மாற்றான் தோட்டத்து மல்லிகையை மணக்கும் என சொல்லி, ஒழுக்கக் கேட்டுக்கு முழு உதாரணமான நீங்கள்,  ஒரு கண்ணில் வெண்ணெயும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் கொண்டவர். இந்துக்கள் என்றால் இளக்காரம். கடவுள் இல்லை என்று காட்டுக் கூச்சல். ஆனால் சுக்ர ப்ரீத்தி மட்டும் செய்யலாம். வேத விற்பன்னர்கள் கொண்டு வீட்டில் வேதம் ஓதலாம். கேக்குறதுக்கு கோடானு கோடி கேனை பயல்கள் இருந்தால் சொல்பவனுக்கு என்ன?

தமிழ் தமிழ் என்று கூச்சலிடும் இவரது தமிழ் பற்று இவர் குடும்பத்தாரின் எந்த பெயரிலும் பிரதி பலிக்க வில்லை. இவர் குடும்பத்தின் எந்த தொழிலிலும் பிரதி பலிக்க வில்லை. இந்தி எதிர்ப்பு போராட்டம் செய்வோம் ஆனால் மத்தியில் ஆட்சி என்றால் ஹிந்தி பேசும் கட்சியுடன் கூட்டு சேர்வோம். எங்கள் குடும்பத்து குல வாரிசுகள் ஹிந்தி கற்கும் ஹிந்தி பேசும்.

கார்பொரேட் சதி என்று பேசும் அவர் குஞ்சுகள், அவரது வாரிசுகள் பத்திரிக்கை, ஊடகம், மருத்துவம், வானூர்தி இன்னும் பல துறைகளில் அடாவடி செய்து யாரையும் வளரவிடாமல் தன் குடும்பம் மட்டும் கோலோச்ச வழி செய்ததை அவரது சாதனைகள் என்று புகழலாம். பல கோடிகள் குவித்தவர் செல்லும் பொழுது என்ன கொண்டு செல்கிறார்?

இறைவன் மிக பெரியவன். எல்லாவற்றிற்கும் அப்பாற் பட்டவன். அவனுக்கு தெரியும் யாருக்கு  எப்போது என்ன தரவேண்டும் என்பது. பிறப்பு இறப்பும் அவன் கையில் உள்ளது. காசு கொடுத்து குவாட்டரும் கோழி பிரியாணியும்  கொடுத்து கூட்டம் சேர்க்கலாம். முட்டாள் கூட்டம் சேரக்கூடாத இடம் சேர்ந்து தனது முகவரியை தொலைத்ததுதான் மிச்சம்.

ஒவ்வொரும் ஆரம்பத்திற்கும் ஒரு முடிவு உண்டு. இதுதான் இயற்கையின் நியதி. இந்த நூற்றாண்டு முடிவதற்குள் கழகம் கலகம்  கண்டு கலகலத்து விடும்.

நீதி அரசர் மார்க்கண்டேய கட்ஜு  கேட்கும் கேள்விகளுக்கு இவர்களால் பதில் சொல்ல முடியுமா. திருட்டு ரயில் ஏறி வந்தவர் இன்று பல லக்ஷம் கோடிகளுக்கு அதிபதி ஆனது எப்படி? தலைவர் குடும்பம் இதற்கு பதில் கூறுமா?

 தான் மட்டுமே உலகில் உத்தமன் போலவும் மீதி எல்லாரும் அயோக்கியர்கள் போலவும் பேசுபவரை தற்குறி என்று தானே சொல்லுவார்கள்?  தன்னை அரசியலுக்கு கொண்டு வந்தவரை ஒழித்தது, கட்சியை குடும்ப சொத்து ஆக்கியது, வாரிசு அரசியல் செய்தது, மக்கள் வயிற்றில் அடித்தது, எதிர் கட்சி தலைவரை சட்ட சபையில் வைத்து மானபங்கப்  படுத்தியது, தமிழ் மக்களை ஹிந்தி படிக்க விடாமல் கிணற்று தவளையாய் வைத்தது,  ப்ராஹ்மணர் துவேஷம், கள்ளக்காதல், மாற்று மதத்தவரிடம் காசு வாங்கி இந்து கோவில்களை சூறை ஆடியது, சிலை கடத்தல், நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்று பஞ்ச பூத சக்திகளையும் கொள்ளை அடித்தது என இவர் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

என் மனைவி, என் மகளின் தாயாகிய மற்றொரு மனைவி, என் மருமகள், என் பேரனின் மனைவி, என் பேரன், என் மற்றோரு மகன், அவர் மனைவி எல்லாரும் கோவிலுக்கு செல்வார்கள் இது அவர்களின் உரிமை ஆனால் தமிழ் மக்கள் இந்துக்கள் கோவிலுக்கு சென்றால் குற்றம். இந்து கோவில்களை கொள்ளை அடிப்பேன் என்ற உயர்ந்த சித்தாந்தம் கொண்டவர். பண்டைய அரசர்கள் கட்டிய கோவில்களை அரசு துறை மூலம் எடுத்து தனது குஞ்சுகளை கொண்டு கொள்ளை அடித்து பாழடையவைத்து மாற்று மதக் காரனுக்கு சொம்பு தூக்கியத்தில் அவருக்கு நிகர் அவர் தான்.

தெய்வம் நின்று கொல்லும். நிச்சயம் கொல்லும் ........ பெரிய பெரிய சாம்ராஜ்யங்கள் நொடிப் பொழுதில் சரிந்து விழுந்து இருக்கிறது. பொறுத்திருப்போம்.... காலம் பதில் சொல்லும். 


Monday 23 July 2018

கூடாரத்துக்குள் நுழைந்த ஒட்டகம் கதை

கூடாரத்துக்குள் நுழைந்த ஒட்டகம் கதை 

ஒரு கூடாரத்தில் ஒருவன் இருந்தானாம். வெளியே ஒரு ஒட்டகம் படுத்து இருந்தது.  இரவு அதிக குளிர். குளிர் தாங்காமல் ஒட்டகம் சிறிது மூக்கை உள்ளே நுழைத்தது. இவனும் “சரி மூக்கை மட்டும்தானே உள்ளே நுழைக்கிறது” என்று விட்டுவிட்டான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முகம், கழுத்து, வயிறு என முற்றிலுமாக உள்ளே நுழைந்து படுத்துக் கொண்டது. இவனுக்கு இடம் போதாமல், ஒட்டகத்தை வெளியிலும் தள்ளமுடியாமல் இவன் வெளியே படுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாம்.

இன்று இந்துக்களின் நிலையும் இதேதான். சனாதன தர்மத்தின் கோட்பாடுகளின் படி நாம் அளவுக்கு அதிகமான பொறுமை காத்து விட்டோம். மூக்கு மட்டும் தானே என்று இடம் கொடுத்தது போக, நமக்கே இடம் இல்லாமல் ஒட்டகம் செய்து விடும் போல இருக்கிறது.
இந்தியா முழுவதும் இந்த ஒரு நிலைமை இருக்கிறது என்றாலும், தமிழகத்தில் நிலைமை மிக மோசம். ஒருபுறம் மக்களின் ஆன்மீக தேடல் அதிகரித்து இருக்கும் நேரத்தில் குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் கூடும் கூட்டமும் அதிகமாக தான் உள்ளது.

இலவசங்களுக்கு அடிமையாகி தமிழ் மக்கள் சுய அறிவை இழந்து விட்டார்கள் என்று தோன்றுகிறது. சிலர் என்னவோ தாங்கள் தான் தமிழ் நாட்டையே காக்கவந்தவர்கள், நாங்கள் தமிழ் போராளிகள் என்று தனக்கு தானே முடிசூட்டிக் கொண்டு  மக்களை ஏமாற்றி ஆட்சி கட்டிலில் அமர்ந்து விடலாம் என பகல் கனவு காண்கிறார்கள்.

நாட்டுக்கு வரவேண்டிய நல்ல திட்டங்களையும் அரசின் நல்ல செயல்பாட்டையும் முட்டு கட்டை போடுவதுதான் போராளிகளின் வேலை என்றால், அப்படி பட்டவர்களை முகவரி தெரியாமல் செய்வது தான் தமிழ் மக்கள் நாட்டுக்கு செய்யும் நல்ல காரியம் ஆகும். மக்களை தூண்டி விட்டு போராட்டம் என்ற பெயரில் கயவர்கள் தங்கள் நோக்கத்தை நிறை வேற்றி கொண்டு விட்டனர். தூத்துக்குடி சம்பவமும், அதை தொடர்ந்த மீனவ சமூகத்தின் கருத்துக்களும் இதை தான் தெளிவு படுத்துகிறது. மத போதகர்கள் என்ற போர்வையில் தீவிர வாதம் வளர்க்கும் பலரை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இத்துணை ஆண்டுகள் முகவரி இல்லாமல் இருந்த இந்த திடீர் போராளிகளுக்கு பணம், பொருள் கொடுத்து ஊக்குவிப்பது யார்? யார் இவர்களின் பின்புலத்தில் இருக்கிறார்கள். வெளிநாட்டு பணம் இவர்களுக்கு எப்படி கிடைக்கிறது? இதற்கெல்லாம் விடை உள்ளங்கை நெல்லிக்கனியாக அனைவருக்கும் தெரியும். 

சமீபத்தில், முன்னாள் இந்திய ஜனாதிபதியின் புத்தகமும் அதில் அவர் தெரிவித்துள்ள விஷயங்களும் காஞ்சி மடாதிபதி மேல் ஏவி விடப்பட்ட அராஜகங்களும்  வெட்ட வெளிச்சம் ஆகின. காரணம் மத மாற்றம் செய்பவர்களின் நோக்கம் நிறைவேற தடையாய் அவர் இருந்ததுதான் காரணம். இதில் வேதனைக்கு உரிய விஷயம் என்ன என்றால், தெய்வ பக்தி உள்ள அரசியல் தலைவர்களும் தங்கள் அரசியல் சுய லாபத்திற்காக மனசாட்சியை அடமானான் வைத்ததுதான்.

வாரிசு அரசியல் பார்த்து பழகிய இந்திய மக்கள், கடந்த நான்கு ஆண்டுகளாக நாடு முன்னேற்றம் அடைய கொண்டுவரப்பட்ட திட்டங்களால் அதிர்ச்சி அடைந்ததை விட ஆச்சரியம் அடைந்ததே அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். இத்தகைய முன்னேற்ற திட்டங்கள் ஏன் கடந்த 50 ஆண்டுகளாக கொண்டு  வரப்பட வில்லை என்பதும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் கேட்கும் கேள்வி. தனது என்று எதுவும் கொள்ளாது தேச நலன் ஒன்று தான் முக்கியம் என்று பகிரங்கமாக அறிவிக்கும் துணிச்சல் முன்பு ஆண்ட தலைவர்களுக்கு ஏன் தோன்ற வில்லை என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாக தான்  பொது மக்களுக்கு உள்ளது. 

2019இல் நாங்கள் சாதித்துவிடுவோம் என்றும் வாரிசு மார் தட்டுகிறார். அவரது கனவு பலிக்குமா என்பது அவருக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். மக்களுக்கு நன்றாகவே தெரியும். அவரை நம்பி நாட்டை ஒப்படைக்க எந்த ஒரு தேச பற்று மிக்க இந்திய குடிமகனும் தயாராக இல்லை என்பது நான் எனது பல மாநில பயணங்களின் போது  அறிந்து கொண்டேன். எனது நண்பர் ஒருவர் சொன்னார், எங்களுக்கு காமெடியன்களை பிடிக்கும் ஆனால் அவர்களை ஹீரோவாக ஆக்க முடியுமா? என்று. அவர் சொல்வதில் உண்மை இருக்கத்தானே செய்கிறது. 

இப்போது இருக்கும் தலைமை நன்றாகத்தானே செயல் படுகிறது, கடந்த நான்கு ஆண்டுகளில் ஊழல் பற்றிய பேச்சே இல்லையே? நாட்டின் பொருளாதாரம், விலைவாசி, அந்நிய முதலீடு, வெளியுறவு கொள்கை, ரயில்வே, மின்சாரம், பொதுப்பணி  இப்படி ஓவொரு துறையிலும் சிறப்பை தானே பார்க்கிறோம். அப்படி இருக்கையில், நாம் ஏன் மாற்றத்தை எதிர் நோக்க வேண்டும். அதுவும் கடந்த காலத்தில் ஒரு மோசமான ஆட்சியை கொடுத்த ஒரு கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்? ஓவ்வொரு இந்திய குடிமகனும் சிந்திக்க வேண்டிய விஷயம் இது.

நல்லது செய்யும் ஒருவர் மீது சேற்றை வாரி இறைப்பதற்கு என்று ஒரு கூட்டம், அதற்கு பின்புலம் அந்நிய சக்திகள் இருப்பதும் அவர்கள் பணத்தை வாரி இறைத்து பல ஊடகங்களை விலைக்கு  வாங்கி ஊடுருவி இருப்பதும் ஆண்டாள் விவகாரத்திலும், அதன் பிறகு நடந்த நிறைய இந்து மதம் சார்த்த விஷயங்கள் ஊதி பெரிதாக்கப் பட்டதும், பொய்யான தகவல்கள் பரப்பப் பட்டதும் நாட்டு மக்கள் அறிந்த விஷயம். இந்து மதம் மட்டுமே குறி வைத்து பொய்யான தகவல்களை பரப்புவதில் ஊடகங்களின் பங்கு மிக அதிகம்.  இது ஒட்டகத்தின் கதையாகத்  தான் நமக்கு தோன்றுகிறது. சமூக ஊடகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. காசு கொடுத்து மீம்களை போட ஒரு கூட்டத்தை விலைக்கு வாங்கியிருக்கும் இந்து மத வெறுப்பாளர்கள் தாங்கள் சாதித்து விட்டதாக பகல் கனவு காண்கிறார்கள். இவர்கள் செய்த வேசித்தனம் மக்களுக்கு தெரியவில்லை என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களையும் அறியாமல் இவர்கள் செய்த ஒரு நல்ல காரியம் இந்து சமய பற்றுள்ளவர்களை எல்லாம் ஒரு அணியில் சேர செய்திருப்பதுதான்.

தமிழகத்தில் மாற்று அரசியல் வராதா என்று ஏங்கி இருந்த மக்களுக்கு விடிவெள்ளியாக ஒருவர் வந்தது போல இருந்தது. பகுத்தறிவு வாதி என்று தன்னை அறிவித்துக் கொண்டாலும், அவரது அபிமானிகள் அவரை "ஆண்டவர்" என்று அழைப்பதில் அவருக்கு அலாதி மகிழ்ச்சி. ஆனாலும் வந்த ஓரிரு மாதத்தில் இவரது சாயம் வெளுத்தது. கமலமாக இருந்த அவர் தான் மலம் என்று நிரூபிப்பது போல் அவரது பேச்சுக்களும், செயல்களும் இருக்கிறது. அடுத்தவர் ஆன்மிகம் கொண்டு அரசியல் செய்வார் என்ற எதிர் பார்ப்பு கொஞ்சம் மக்கள் மனதில் இருக்கிறது. ஆனால் அவர் எப்போ வருவாரோ?

தமிழகத்தை மாநில கட்சி தான் ஆளும் என்று பல அரசியல் வாதிகள் நிச்சயமாக நம்புகிறார்கள். ஆனால் காலம் என்ன பதில் சொல்லப் போகிறது என்பது யாருக்கு தெரியும். மாற்றம் ஒன்று தான் மாறாதது, இதுதான் உலக நியதி.

மக்கள் மனதில் நல்ல நாள் எப்போது வரும், நாட்டுக்கு விடிவு காலம் எப்போது பிறக்கும் என்பது தான் இப்போது இருக்கும் எதிர்பார்ப்பு.

நம் வாழ்க்கை நம் கையில். கையில் (மை) கறை கொண்டு களை  எடுப்போம். நல்ல தலைவரை தேர்ந்து எடுப்போம். 

இன்னும் பேசுவோம்....