Friday 18 April 2014

நட்பு

கடல் என்றாயே நண்பா
உவர்ப்பா நான் உனக்கு
உன்னுடன் நான் இருந்தால்
உவகையாய் தானே இருக்கும்
கடல் நான் என்றால் அலை நீ
கண நேரம் கூட நாம் பிரிவதில்லை
மனதில் நட்பின் விதை இருத்தி
மரமாய் வளர்த்தோம் அன்பு ஊற்றி
ஞாலம் இருக்கும் வரை
நம் நட்பிருக்கும்
நம்பிக்கை இருக்கிறது எனக்கு

No comments:

Post a Comment

உங்கள் விமர்சனம்/ கருத்துக்கள் அளித்து எனக்கு ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்